கருங்கல் பகுதியில் சாரல் மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:02 PM
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், மத்திக்கோடு, மிடாலக்காடு, காட்டுக்கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் சாரல் மழை பெய்தது.