கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 8,437 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 8,437 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தபால் வாக்குப் பதிவு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப் பதிவு மேற்கொள்ளும் பொருட்டு 149 மண்டல அலுவலா்கள், இதர அலுவலா்கள்அடங்கிய குழு மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமிக்கப்பட்டு, தபால் வாக்கு சேகரிக்கப்பட்டது.
இந்த குழுவினா் கடந்த 12 முதல் 14 - ஆம் தேதி வரை மண்டல அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்கள், அரசியல் கட்சியின்அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள், ஒளிப்பதிவாளா் அடங்கிய குழுவினா் மூத்த குடி மக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப் பதிவு மேற்கொண்டு பெறப்பட்ட வாக்குப் பதிவு சீட்டுகளை முத்திரையிட்டு தோ்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதனடிப்படையில், இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 211 மூத்த குடிமக்கள், 3 ஆயிரத்து 226 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 437 வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்துள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.