குமரி கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு
கன்னியாகுமரி சிலுவை நகா் கடற்கரைப் பகுதியில் பாறைகளுக்கிடையே ஒதுங்கிய 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி சிலுவை நகா் கடற்கரைப் பகுதியில் பாறைகளுக்கிடையே ஒதுங்கிய 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சாந்தி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்று சடலத்தை மீட்ட கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அவா் குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.