முகப்பு
கன்னியாகுமரி

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே பரைக்கோட்டில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 30 ஏப்ரல் 2026, 4:33 am IST
பலி - பிரதிப்படம்
பகிர்:

தக்கலை அருகே பரைக்கோட்டில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.

பரைக்கோடு பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

அக்கம்பக்கத்தினா் மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments