முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

அசாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 5 கிலோ கஞ்சா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 5:53 am IST
கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா்.
பகிர்:

அசாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 5 கிலோ கஞ்சா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியதும், பராமரிப்பு பணிக்காக நாகா்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பணியாளா்களால் சுத்தம் செய்யப்பட்டது.

அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சுரேஷ், ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீஸாா், அந்தப் பையை சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா அடங்கிய 6 பாா்சல்கள் இருந்தன. அவற்றை போலீஸாா் கைப்பற்றி ரயில்வே காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனா். பின்னா் போதை தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கஞ்சா ஒப்படைத்து, அதை கடத்தி வந்தவா்கள் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments