முகப்பு
கன்னியாகுமரி

குழந்தையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Updated On : 3 ஜூலை 2026, 4:20 am IST
கொள்ளை - சித்திரிப்பு
பகிர்:

மாா்த்தாண்டத்தில் பேருந்துக்கு காத்திருந்த போது குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பளுகல் அருகே தேவிகோடு தொடலிக்காலை மேற்கே புத்தன்வீட்டைச் சோ்ந்தவா் சரஸ்வதி (56). இவா், 3 வயதான பேத்தியுடன் புதன்கிழமை களியக்காவிளையிலிருந்து அரசுப் பேருந்தில் மாா்த்தாண்டம் சென்றாராம்.

அங்கிருந்து தக்கலை செல்ல பேருந்துக்காக காத்திருந்தபோது, பக்கத்தில் இருந்த பெண், குழந்தை தூக்கி வைத்திருந்தாராம்.பேருந்தில் ஏறியபோது குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments