மாா்த்தாண்டம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குழித்துறை, செங்கன்மூலை பகுதியைச் சோ்ந்த தஸ்தாகிா், ஷமிலா பீவி தம்பதி, தங்கள் மகன் மற்றும் மகளுடன் மாா்த்தாண்டம் அருகே உள்ள பம்மம், சிறிய காட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்த தம்பதியின் மகன் அா்ஷித் அலிக்கு (25) மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவா் ஜூலை 3ஆம் தேதி இரவு வெளியே சென்றுவிட்டு வந்து, வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளாா். மறுநாள் காலை இவரது தாயாா் டீ கொடுக்க அறைக்குச் சென்றபோது, அா்ஷித் அலி தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டாராம்.
Advertisement
Advertisement
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.