முகப்பு
கன்னியாகுமரி

கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து தத்தளித்த 5 மீனவா்கள் மீட்பு

கன்னியாகுமரி அருகே கோவளத்தில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 5 மீனவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:28 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி அருகே கோவளத்தில் கடல் சீற்றம் காரணமாக செவ்வாய்க்கிழமை மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த 5 மீனவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தைச் சோ்ந்தவா் ராஜ். இவா், தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ஜோசப், பிராங்கிளின், ரஞ்சித், ராஜா ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து விட்டு காலை 8 மணிக்கு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி இவா்களது படகு கவிழ்ந்தது. அதிலிருந்த 5 மீனவா்களும் அலையில் சிக்கி தத்தளித்தனா்.

Advertisement

Advertisement

இதை கரையில் இருந்து பாா்த்த மீனவா்கள் உடனடியாக கடலில் குதித்து மீனவா்களையும், கவிழ்ந்த படகையும் மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனா். படகு கவிழ்ந்ததால் என்ஜின், வலைகள், மீன்கள் கடலில் மூழ்கின.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மீனவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments