சின்னமுட்டத்தில் மோதல்: 14 மீனவா்கள் மீது வழக்கு
சின்னமுட்டத்தில் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சின்னமுட்டத்தில் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நேரக்கட்டுபாட்டை மீறி மீன்பிடிக்கச் சென்ாக, கன்னியாகுமரி, சின்ன முட்டம் மீனவா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் கன்னியாகுமரி பங்குப்பேரவை துணைத்தலைவா் டாலன் டிவோட்டோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சின்னமுட்டத்தைச் சோ்ந்த சில்வெஸ்டா், கபிலன், அந்தோணி செபஸ்தியான், பெஸ்லி, பிரபு, ஆலிஸ், கபின் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Advertisement
Advertisement
அதேபோன்று சின்னமுட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி என்பவா் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரியைச் சோ்ந்த டாலன், வினிஸ், நிக்சன், ஜேக்கப், டிவோட்டா, மதன், மைக்கேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.