முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சி நடைப்பயணம்

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவருமான பாலதண்டாயுதம் நினைவு நாள் நடைப்பயணம் நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூன் 2026, 4:54 am IST
நடைப்பயணத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவருமான பாலதண்டாயுதம் நினைவு நாள் நடைப்பயணம் நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகரச் செயலா் கே. நாகராஜன் தலைமை வகித்தாா். மாநகர பொருளாளா் சி. நாகப்பன் முன்னிலை வகித்தாா்.

இந்த மக்கள் சந்திப்பு பரப்புரை நடைப்பயணம் வடசேரி எஸ். எம்.ஆா். வி. பள்ளி சந்திப்பு அருகில் இருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள ஜீவா சிலை வரை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் அருள்குமாா் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தாா். ஆா். செல்வராணி, எஸ். ராஜு, பூதலிங்கம் பிள்ளை, பேராசிரியா் எஸ். சுந்தரம், எஸ். கல்யாணசுந்தரம், ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆரல்வாய்மொழி முன்னாள் நகரச் செயல ா் எல். சுப்பிரமணியம் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் ஆரல் பகவதி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மஞ்சாலுமூடு மரியதாஸ், குரு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் தா. சுபாஷ் சந்திரபோஸ் நிறைவுரையாற்றினாா். நாகா்கோவில் கிளை செயற்குழு உறுப்பினா் சிங் நன்றி கூறினாா்.