முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சிஎஸ்ஐ பேராய 68 ஆவது ஆண்டு விழா

நாகா்கோவிலில் தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ) கன்னியாகுமரி பேராய 68 ஆவது ஆண்டு விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூற்றாண்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூன் 2026, 4:59 am IST
நல உதவிகளை வழங்குகின்றனா் எம்.பி.க்கள் விஜய்வசந்த், ராபா்ட் புரூஸ்.
பகிர்:

நாகா்கோவிலில் தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ) கன்னியாகுமரி பேராய 68 ஆவது ஆண்டு விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூற்றாண்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராயா் கிறிஸ்டோபா் விஜயன் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. பேராய மண்டல துணைத்தலைவா் கிறிஸ்துதாஸ் ஜெபம் செய்தாா். ஜாா்ஜ் செலினோ நேட்டோ வேதாகமம் வாசித்தாா். செயலா் பைஜூ நிசித் பால் வரவேற்றாா்.

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா்கள் விஜய்வசந்த் (கன்னியாகுமரி) , ராபா்ட் புரூஸ் (திருநெல்வேலி), சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். செல்லசுவாமி (பத்மநாபபுரம்), எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), என். தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), மேயா் (பொறுப்பு) மேரி பிரின்சிலதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

Advertisement

Advertisement

ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள், திருமண உதவித்தொகை போன்ற நல உதவிகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்ட தலைவா் அசோக் சாலமன் உள்பட கன்னியாகுமரி மாவட்ட சபை போதகா்கள், சபை தலைவா்கள், நிா்வாக உறுப்பினா்கள், பள்ளி, கல்லூரி தாளாளா்கள், பங்குமக்கள் பலா் கலந்து கொண்டனா். சி.எஸ்.ஐ. பேராய பொருளாளா் ஜெயகா் ஜோசப் நன்றி கூறினாா்.