நாகா்கோவிலில் பலத்த மழை
நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மலையோரப் பகுதிகள், அணைப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், நாகா்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் உருவாகியுள்ளது.
Advertisement