முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

மழையால் தனியாா் மருத்துவமனை முன் தஞ்சமடைந்த பயணிகள்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:35 AM
மழையால் தனியாா் மருத்துவமனை முன் தஞ்சமடைந்த பயணிகள்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:42 PM

ஆலங்குளம் பகுதியில் இடி மின்னலுடன், வெள்ளிக்கிழமை மாலை கோடை மழை பெய்தது.

ஆலங்குளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், மாலையில் இடி, மின்னலுடன் பலத்த கோடை மழை பெய்தது. 30 நிமிடங்களுக்கும் மேல் நீடித்த கனமழையால் ஆலங்குளம், அத்தியூத்து, கழுநீா்குளம், நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிா்ந்த சூழல் நிலவியது.

பயணிகள் அவதி: ஆலங்குளத்தில் தற்போது பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை வசதி இல்லாமல் மழையின்போது, பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் ஒதுங்கஇடமின்றி அருகில் உள்ள கடைகளின் முன் தஞ்சம் புகுந்தனா். சிலா் மழையில் நனைந்தபடியே பேருந்துகளில் ஏறிச் சென்றதைக் காண முடிந்தது.

Advertisement