முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

கோடைக்காலத்தில் குளுகுளு மழை பெய்வது தொடர்பாக...

Updated On : 6 ஏப்ரல், 2026 at 6:41 AM
சென்னையில் கனமழை - DPS
பகிர்:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தமிழகத்தின் பல பகுதியில் கடும் வெய்யில் வாட்டிய வதைத்து வந்தது. ஒரு சில இடங்களில் வெய்யில் சதம் அடித்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பச்சலனம் சற்று தணிந்துள்ளது.

Advertisement

சென்னையில், அண்ணாநகர், பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில். சுங்குவார்சத்திரம், வல்லக்கோட்டை இருங்காட்டுக்கோட்டை, தாம்பரம் குரோம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கள் கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

அதேசமயம் பல்லாவரம், சேலையூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments