முகப்பு
தமிழ்நாடு

கோடையைக் குளிர்விக்கும் மழை!

சென்னையில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று(ஏப். 6) காலை கனமழை பெய்தது.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:46 AM
மழை - கோப்பிலிருந்து...
பகிர்:

சென்னையில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று(ஏப். 6) காலை கனமழை பெய்தது.

ஆந்திர மாநிலம் ராயலசீமா, அதையொட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென்தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஏப். 6) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

Advertisement

இதன் காரணமாக, அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக வெய்யில் தாக்கம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது.

summary

The Chennai Meteorological Centre has stated that there is a possibility of rain in eight districts, including Chennai, over the next two hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments