கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மன்னாா் வளைகுடா முதல் தெற்கு உள் கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், உள் தமிழகம் மற்றும் அதையொட்டிய கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 21) லேசான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மாா்ச் 22 முதல் மாா்ச் 24 வரை லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் பள்ளிக்கரணை, ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் பகுதியில் 100 மி.மீ மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.