முகப்பு
தேனி

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 6:27 PM
மழை
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம், போடி பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

உத்தமபாளையம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிகுள்ளாகி வந்தனா். இந்த நிலையில், கம்பம், கூடலூா், உத்தமபாளையம், தேவாரம், சின்னமனூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த திடீா் மழையால் வெப்பம் தனித்து குளிா்ச்சியான கால நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உத்தமபாளையம் செல்லும் சாலையில் சாலைப் பணியின் போது தோண்டப்பட்ட கழிவுநீா் கால்வாய் பள்ளத்தால் மழைநீா் செல்ல வழியின்றி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பேரூராட்சியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா், சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

போடி: போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் வரை போடி பகுதியில் வெப்பம் நிலவிய நிலையில், 2 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சுமாப் ஒரு மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் இந்தப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments