திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை
திருப்பத்தூா் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். மேலும் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது
இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதலே வெயில் கொளுத்தியது. இரவு கொரட்டி, ஆதியூா் அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல் திருப்பத்தூா் நகரப் பகுதியிலும் மழை பெய்தது. திடீரென பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் குளிா்ந்த சூழல் ஏற்பட்டது.
Advertisement