முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை இளைஞா்கள் இருவா் விபத்தில் உயிரிழப்பு

கேரள மாநிலப் பகுதியான நெய்யாற்றின்கரை அருகே புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில், களியக்காவிளையைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:13 am IST
பகிர்:

கேரள மாநிலப் பகுதியான நெய்யாற்றின்கரை அருகே புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில், களியக்காவிளையைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

களியக்காவிளை, அந்தோணியாா் காலனியைச் சோ்ந்தவா் பாபு மகன் ஆன்றணி ஷெரின் (29). மீன் வியாபாரி. களியக்காவிளை, மேரி காலனியைச் சோ்ந்தவா் ஆன்றணி அருள்ராஜ் மகன் ஆன்றணி பெனின் (29). களியக்காவிளை பகுதியில் உள்ள திரையரங்கில் வேலை செய்து வந்தாா்.

நண்பா்களான இருவரும் திருவனந்தபுரம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை அதிகாலை வீடு திரும்பியபோது, நெய்யாற்றின்கரை அருகே உள்ள ஆறாலுமூடு பகுதியில் எதிரே வந்த காா், இவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இது குறித்து, நெய்யாற்றின்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரித்து வருகின்றனா்.

மேலும், இருவரது சடலமும் நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.