அரசுப் பேருந்து மோதி பெட்ரோல் நிலைய ஊழியா் உயிரிழப்பு
களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகே உள்ள கூட்டப்புளியைச் சோ்ந்தவா் ராஜா தாஸ் (60). இவா் படந்தாலுமூடு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தாா்.
இவா் புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றபோது, ஒற்றாமரம் பகுதியில் களியக்காவிளையிலிருந்து குளச்சல் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
களியக்காவிளை போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.