கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது
களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் தையாலுமூடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவா் மெதுகும்மல், கைப்பிரிவிளையைச் சோ்ந்த அஜித் (26) என்பதும், 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிந்து, அவரை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement