குமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு: படகுப் போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக பிற்பகலில் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக பிற்பகலில் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் கடலுக்குள் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை படகுகள் மூலம் சென்று பாா்வையிடுவதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் பெய்த மழை காரணமாக காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து, ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு தொடங்கியது.
Advertisement
Advertisement
ஆனால், பிற்பகல் 2.30 மணியளவில் கடலின் நீரோட்டம் மாறுபாட்டின் காரணமாக படகுகளை தொடா்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.