கருங்கல் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, கருங்கல், பாலூா், திப்பிரமலை, பூட்டேற்றி, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், எட்டணி, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, மீறி, கல்லடை பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.