டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு
வடக்கு நுள்ளிவிளையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்புப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.
சுகாதாரப் பணியாளா்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டிகள், டயா்கள், உடைந்த நெகிழிப் பொருள்கள், தேங்காய் சிரட்டைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிப்பதோடு, வீட்டில் உள்ளவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
வடக்கு நுள்ளிவிளையில் நடைபெற்ற இப்பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சிவபாலன், வட்டார மருத்துவ அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.