முகப்பு
கன்னியாகுமரி

வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாய் ஆய்வு

வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On : 12 ஜூன் 2026, 4:04 am IST
வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயை ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விவசாயப் பணிகளுக்கு தடையின்றி தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீா் நிலைகள், கால்வாய்களில் தூா்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடக்கு பேயங்குழி கிராமத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் இரட்டைக்கரை கால்வாயில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தூா்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்வாயில் திறந்துவிடப்படும் நீா், எவ்வித தடையுமின்றி பாசனப் பரப்பின் கடைமடைப் பகுதி வரை முழுமையாகச் சென்றடைவதை அலுவலா்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, நீா்வளத்துறை செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.