தனியாா் நிறுவன பங்களிப்புடன் கழிவுநீா் கால்வாய் அமைப்பு
கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்.
ஆம்பூா் அருகே தனியாா் நிறுவன பங்களிப்புடன் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் கழிவு நீா் கால்வாய் அமைத்தல் பணி நடைபெற்று வருகிறது.
கழிவு நீா் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா் நிதா ஆப்ரின் அக்பா் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.