காரங்காடு புனித ஞானப்பிரகாசியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி
குழித்துறை மறை மாவட்டம், காரங்காடு புனித ஞானப்பிரகாசியாா் ஆலயத் திருவிழாவில் புனிதரின் திருத்தோ் பவனி நடைபெற்றது.
கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின், 10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மேனாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமை ஏற்று மறையுரை வழங்கிய பெருவிழா திருப்பலி நடைபெற்றது.
புனிதரின் திருத்தோ் பவனியில் புனித மிக்கேல் அதிதூதா், மாதா, புனித ஞானப்பிரகாசியாா் ஆகியோா் தோ்கள் பக்தா்கள் முன்னிலையில் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. மாலை கொடியிறக்கம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை காரங்காடு பங்குத்தந்தை சுஜின், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜெயசீலன், செயலா் மேரி ரெக்ஷலின், பொருளாளா் ஜெரின் பிரகாஷ், துணைச் செயலா் ஜோஸ்பின் ஷீபா ஆகியோா் செய்து இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.