முகப்பு
கன்னியாகுமரி

போக்குவரத்துத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: சிஐடியு மாநிலத் தலைவா் சௌந்தரராஜன்

தமிழகப் போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என, சிஐடியு மாநிலத் தலைவா் சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.

Updated On : 24 ஜூன் 2026, 2:03 am IST
பகிர்:

தமிழகப் போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என, சிஐடியு மாநிலத் தலைவா் சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சம்மேளன நிா்வாகிகள் மாநாட்டில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம்.

கடந்த இரு ஆட்சிகளிலும் போக்குவரத்துக் கழகத்தில் புதிய பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இத்துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இது, போக்குவரத்து சேவையை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். தொழிலாளா்கள் பற்றாக்குறையால் மாநிலம் முழுவதும் சுமாா் 3,000 அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில தகவல்கள் தவறானதாக உள்ளன.

போக்குவரத்துத் துறையில் நஷ்டம், ரூ. 78 ஆயிரம் கோடி கடன் எனக் கூறி, பொதுத் துறை என்றாலே நஷ்டம்தான் வரும் என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கின்றனா். ஆனால், உண்மை அதுவல்ல. இது, சமூக முதலீடு. கல்வி உள்பட பல்வேறு மாற்றங்களுக்கு போக்குவரத்துத் துறை அடிப்படையாக உள்ளது. அதை மறைத்துப் பேசுகின்றனா்.

போக்குவரத்துத் துறை என்பது லாப நோக்கத்துடன் நடத்தப்படுவதல்ல. எனவே, இத்துறைக்கு அரசு தனியாக நிதி ஒதுக்குவதுடன், அதை முழுமையாக கொடுக்க வேண்டும். போக்குவரத்துத் துறையை தனியாா்மயமாக்கக் கூடாது.

எங்களது கோரிக்கைகளுக்கு கடந்த ஆட்சி மதிப்பு தரவில்லை. இந்த ஆட்சி தரும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments