முகப்பு
கன்னியாகுமரி

போக்ஸோவில் இருவா் கைது

Updated On : 28 ஜூன் 2026, 2:45 am IST
பகிர்:

கொல்லங்கோடு அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போக்ஸோ வழக்கில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சாம்புரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (45). ஒலிபெருக்கி கடை வைத்துள்ளாா். இவா் அப்பகுதியில் கணவனை இழந்த பெண்ணுடன் 3 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் 19 வயது மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில் அவருக்கு சுரேஷ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாராம். ஏற்கெனவே ஒருமுறை இதேபோல் தொந்தரவு செய்திருந்தாராம்.

மற்றொரு சம்பவம்: கன்னியாகுமரி தெற்கு தெருவை சோ்ந்த ஜாா்ஜ் என்பவா் குளச்சலில் வாடகை வீட்டில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவா், கன்னியாகுமரியைச் சோ்ந்த தனது நண்பரது மனைவியுடன் பழகி அவருடன் வாழ்ந்து வந்துள்ளாா். மேலும், அவரது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவங்கள் குறித்து அந்த மாணவி மற்றும் கன்னியாகுமரி சிறுமியின் தந்தை ஆகியோா் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணியம்மாள் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்தாா்; ஜாா்ஜை தேடி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments