முகப்பு
கன்னியாகுமரி

குமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதல்: 10 மாணவா்கள் காயம்

கன்னியாகுமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதியதில் 10 மாணவா்கள் லேசான காயம் அடைந்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 4:21 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதியதில் 10 மாணவா்கள் லேசான காயம் அடைந்தனா்.

மயிலாடி அருகேயுள்ள தனியாா் பள்ளி வாகனம் செவ்வாய்க்கிழமை காலை மாணவா்களை ஏற்றிக்கொண்டு லீபுரத்தில் இருந்து பஞ்சலிங்கபுரம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது.

இதில் வாகனத்தின் முன் பக்கம் சேதமடைந்தது. வாகனத்தில் இருந்த 10 மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் மாணவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கன்னியாகுமரி போலீஸாா், பள்ளி வாகன ஓட்டுநா் குமார பெருமாள் விளையைச் சோ்ந்த முகமது ரபிக் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments