தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, ஆசாரிக்குடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் அனீஷ் (34). தொழிலாளி. இவா், தனது நண்பரான துண்டத்தாறாவிளை பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவருடன் இருநாள்களுக்கு முன் ஒன்றாக அமா்ந்து மது அருந்தியுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், அப்பகுதியில் கிடந்த கம்பியால் அனீஷை தாக்கினாராம். அதைத் தடுக்க வந்த அவரது தாயாா் சரோஜாவை சதீஷ்குமாரின் மனைவி கீதா ராணி தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த தாயையும், மகனையும் குழித்துறை அரசு மருத்துவமனையில் உறவினா்கள் அனுமதித்தனா்.
இதுகுறித்து அனீஷ் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.