முகப்பு
கன்னியாகுமரி

குமரி கடற்கரையில் மயங்கி விழுந்த சுற்றுலாப் பயணி

கடற்கரைக்குச் செல்ல முடியாமல் கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.

Updated On : 2 மே 2026, 2:27 am IST
கடற்கரைக்குச் செல்ல முடியாமல் கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.
பகிர்:

கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை இரவு கடற்கரைப் பகுதியில் மயங்கி விழுந்த சுற்றுலாப் பயணியை மீட்க வந்த ஆம்புலன்ஸ் போதிய பாதை வசதி இல்லாததால் கூட்டத்துக்குள் சிக்கித் திணறியது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை மாலை முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம் சாலை, கடற்கரைச் சாலை, சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், இரவு 7 மணியளவில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து கடற்கரை செல்லும் பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவா் மயங்கி விழுந்தாா். இது குறித்து, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

உடனடியாக அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்த நிலையில், காந்தி மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலை இரும்புக் கம்பியால் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் கூட்டத்துக்குள் சிக்கியது. இதையடுத்து, மயங்கி விழுந்த பயணியை சிலா் தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினா்.

முக்கடல் சங்கமம் செல்லும் பாதையை இரும்பு கேட்டால் அடைத்து வைத்துள்ளதால், அவ்வழியாக கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனா். மேலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையும் உள்ளது.

எனவே, இந்த பாதையைத் திறந்துவிட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments