FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமானதால் இளைஞர் பலி!

போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமானதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பற்றி...

Updated On : 12 ஜூன் 2026, 12:14 pm IST
108 ஆம்புலன்ஸ். - கோப்புப் படம்.
பகிர்:

கேரளத்தில் போக்குவரத்து நெருக்கடியால் ஆம்புலன்ஸ் பயணம் தாமதமானதன் காரணமாக இளைஞர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் உள்ள பழங்குடியினர் மருத்துவமனையிலிருந்து, திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது, போக்குவரத்து நெரிசலால் தாமதமானதால் இவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அட்டப்பாடியில் உள்ள வலமாரியைச் சேர்ந்த சஜீவ் குமார் (25) என்று குறிப்பிட்ட காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

பழங்குடியினர் சமுதாயத்தைச் சார்ந்த சஜீவ் குமார் என்னும் இந்த இளைஞர் கடும் காய்ச்சல் காரணமாக அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.

வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஆம்புலன்ஸுல் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது, ​​அட்டப்பாடி மலைப்பாதையில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு மணி நேரம் தாமதமானது. இருப்பினும், மருத்துவமனையை அடையும் போது சஜீவ் குமாரின் நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

summary

A young man died after the ambulance transporting him from a tribal hospital in the Attappadi area of ​​Palakkad district, Kerala, to the Medical College Hospital in Thrissur was delayed by traffic congestion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments