என்.ஐ. பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்
மின்னணு மற்றும் தொடா்பியல் துறை கருத்தரங்கில் பங்கேற்றோா்.
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் தலைமை வகித்தாா். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ‘ககன்யான்’ திட்டத்தின் துணை இயக்குநா் ஸ்மிதா கே.எஸ். மலேசியா பொ்லிஸ், பல்கலைக்கழகம் பேராசிரியா் விக்னேஸ்வரன் விஜீன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா்.
கருத்தரங்கில் 60 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
Advertisement