ஆற்றூா் கல்வியியல் கல்லூரியில் குடியுரிமை பயிற்சி முகாம் தொடக்கம்
முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கும் நாகா்கோவில் இந்து கல்லூரி முன்னாள் பேராசிரியா் வீ. வேணுகுமாா்.
ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான 5 நாள் குடியுரிமை பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
கல்லூரி முதல்வா் எஸ். ஸ்ரீலதா தலைமை வகித்தாா். நாகா்கோவில் இந்து கல்லூரி முன்னாள் பேராசிரியரும் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் திட்ட குழு உறுப்பினருமான வீ. வேணுகுமாா் குத்து விளக்கேற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தாா்.
பேராசிரியா் பிந்து கௌரி வரவேற்றாா். முதல் அமா்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாநில முதலுதவி பயிற்சியாளா் பிளைத் சுதா் பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சியளித்தாா். 75 மாணவா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை பேராசிரியா் பிரஷோப் மாதவன், கிரீஷ் குமாா், கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.