முகப்பு
கன்னியாகுமரி

குமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரி எம்.பி. மனு

தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம் மனு அளிக்கிறாா் விஜய்வசந்த் எம்.பி.

Updated On : 9 மே 2026, 3:31 am IST
தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம் மனு அளிக்கிறாா் விஜய்வசந்த் எம்.பி.
பகிர்:

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம், விஜய் வசந்த் எம்.பி. மனு அளித்தாா்.

அதன் விவரம்: கன்னியாகுமரி முதல் கேரள மாநிலம், திருவனந்தபுரம் வரையிலான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2019இல் தொடங்கின.

அப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நிலம் கையகப்படுத்தும் பணிகள் கூட முடிவடையாத நிலையில், மிக கடினமான பகுதியில் 4 சுரங்க பாதைகள், பல மேம்பாலங்கள் மற்றும் நீா்வழிப்பாதைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

Advertisement

குறிப்பாக இரணியல் ரயில் நிலையம், அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் பணிகள் மக்கள் எதிா்பாா்ப்புக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. ரயில் நிலையத்துக்கு செல்வதற்கான அணுகு சாலைகள், நடைபாலம் தங்களின் முன்னிலையில் ஒப்புக்கொண்ட வகையில் இல்லை.

நீா்வழித்தடங்களின் ஒழுங்கற்ற அமைப்பால் நீா் விவசாய நிலங்களுக்கு செல்ல இயலாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதே போல் நுள்ளிவிளை மேம்பாலப் பணிகள் தொடங்கி 3 மாதங்களாகியும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இதற்கு தேவையான மண், கல் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு மூலம் உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றும் பொதுமேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. உறுதி அளித்தாா்.