மனைவியுடன் தகராறு: கணவா் தற்கொலை
தக்கலை அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவா் புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவா் புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே உள்ள சித்திரங்கோடைச் சோ்ந்தவா் ஜெகன் (41). மீன் வண்டி ஓட்டும் தொழில் செய்து வந்தாா். இவரின் மனைவி பேபி ஷாலினி வெள்ளமோடியில் உள்ள தனியாா் பள்ளியில் பணி செய்து வருகிறாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
ஜெகன் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாம். அதேபோல், புதன்கிழமை தகராறு செய்து, மனைவி குழந்தைகளை வீட்டைவிட்டு விரட்டியதில், மனைவி பக்கத்து வீட்டிற்குச் சென்றுள்ளாா்.
Advertisement
அப்போது, வீட்டில் ஜெகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து, கொற்றிகோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.