முகப்பு
விழுப்புரம்

மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

அரகண்டநல்லூா் அருகே மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 14 மே 2026, 12:05 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஆலம்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.மணிகண்டன் (29). இவருக்குத் திருமணம் நடைபெற்று 8 மாதங்கள் ஆகின்றன. கூலித்தொழிலாளியான மணிகண்டன் தினமும் மது அருந்தி வீட்டுக்கு வந்தாராம். இதை அவரது மனைவி ராஜகுமாரி கண்டித்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மணிகண்டன், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.