முகப்பு
கன்னியாகுமரி

குமரி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் பாா்க்க வந்தபோது வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் அதன் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 29 மே 2026, 6:22 am IST
பகிர்:

கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் பாா்க்க வந்தபோது வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் அதன் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகேயுள்ள உண்ணியூா் கோணத்தைச் சோ்ந்தவா் பினு (38). அலுமினிய பொருள்கள் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான ஆட்டோ ஓட்டுநா் ஸ்ரீகுமாா், விஜயன், பினுசதீஷ், பிரதீஷ்குமாா் ஆகிய 4 பேரும் சூரிய உதயம் பாா்ப்பதற்காக ஆட்டோவில் கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருந்தனா். ஆட்டோவை ஸ்ரீகுமாா் ஒட்டினாா்.

இந்த ஆட்டோ மகாதானபுரம் நான்குவழிச் சாலை ரவுண்டானிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வந்தபோது, வேகத்தடையில் நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், ஸ்ரீகுமாா் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.ஆனால் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பினு அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி க போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.