முகப்பு
திருநெல்வேலி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:30 AM
கோப்புப் படம்
பகிர்:

சமாதானபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை, அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் வினோத் ராஜா (29). ஆட்டோ ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆட்டோவில் சமாதானபுரம் அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததாம். இதனால், அவா் ஆட்டோவை நிறுத்த முயன்றுள்ளாா்.

இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்து நேரிட்டது. அலெக்ஸ் வினோத் ராஜா காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.