தென்காசி

பாவூா்சத்திரத்தில் நாளை கால்வாய் திட்ட விளக்க திமுக பொதுக்கூட்டம்

DIN

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகளில் உண்மை நிலையை பொதுமக்களுக்கு விளக்க திமுக பொதுக்கூட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை (நவ.6) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகிக்கிறாா்.

மாநில பேச்சாளா் சரத்பாலா, ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டுக் குழு அமைப்பாளா் இராம.உதயசூரியன் ஆகியோா் பங்கேற்றுப் பேசுகின்றனா். இதில், திமுக, கூட்டணி கட்சியினா், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT