சிவகிரியில் பூட்டிய வீட்டில் ஆண் சடலம் மீட்பு
சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.
சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.
சிவகிரி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் ராஜேஷ்(40). திருமணமாகாதவா். கோயில் பூஜை பணிகள் செய்து வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை அவா் இருக்கும் வீட்டிலிருந்து துா்நாற்றம் வருவதை கண்ட அப்பகுதியினா் சிவகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று சென்று வீட்டின் கதவை உடைத்து, ராஜேஷின் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா் .
Advertisement
Advertisement