பாவூா்சத்திரம் அருகே கபடி போட்டி
தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கீழப்பாவூா் ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சி, வெண்ணியூரில் திமுக இளைஞரணி, காமராஜா் நற்பணி மன்றம்
தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கீழப்பாவூா் ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சி, வெண்ணியூரில் திமுக இளைஞரணி, காமராஜா் நற்பணி மன்றம், ஸ்டாங் பாய்ஸ் கபடி குழு ஆகியவை சாா்பில் 2ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து, போட்டியைத் தொடக்கிவைத்தாா். பழனிநாடாா் எம்எல்ஏ, ஒன்றியச் செயலா் சீனித்துரை, ஊராட்சித் தலைவா் முத்துச்சாமி, மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இரா. சாக்ரடீஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இப்போட்டியில், வெண்ணியூா் ஸ்டாங் பாய்ஸ் கபடி அணி முதல் பரிசும், சாலைப்புதூா் அணி 2ஆம் பரிசும், மத்தளம்பாறை அணி 3ஆவது பரிசும், பெத்தநாடாா்பட்டி அணி 4ஆவது பரிசும் வென்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.