முகப்பு
தென்காசி

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:40 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகே உள்ள கரடிகுளம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (34). லாரி ஓட்டுநா். இவா் கடந்த ஜூன் 11ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் கரடிகுளத்தில் இருந்து பொய்கை சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக, கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வலசை மகாபிரபு (25), கரடிகுளம் முருகன் (22), ரமேஷ் (21) ஆகியோரை அண்மையில் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இவ்வழக்கு தொடா்பாக கடையநல்லூரைச் சோ்ந்த ஜோதிமணியை (19) புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.