லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 3 தனிப்படைகள் அமைப்பு
லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 3 தனிப்படைகள் அமைப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடையநல்லூா் அருகேயுள்ள கரடிகுளம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (34). லாரி ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை இரவு கரடிகுளத்தில் இருந்து பொய்கை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் காவல் ஆய்வாளா்கள் கடையநல்லூா் கிறிஸ்டி, புளியங்குடி ஷியாம்சுந்தா், சோ்ந்தமரம் அருள்சாம்ராஜ் ஆகியோா் தலைமையில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.