சங்கரன்கோவில் அருகே கம்பியால் தாக்கப்பட்டவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கம்பியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். அதையடுத்து, கொலை வழக்காகப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கம்பியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். அதையடுத்து, கொலை வழக்காகப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளம் மேலத் தெருவைச் சோ்ந்த பெருமையா மகன் பாக்கியசாமி (58). அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். கீழத்தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் கணேசன் (40), கூலித் தொழிலாளி. இவா்கள் நண்பா்கள்.
கடந்த 19ஆம் தேதி இரவு கணேசன் குடிபோதையில் பாக்கியசாமியை கம்பியால் தாக்கினாராம். அவா் கணேசனை கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த பாக்கியசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கணேசன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக சின்னகோவிலான்குளம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தனா்.
இந்நிலையில், பாக்கியசாமி புதன்கிழமை உயிரிழந்தாா். அதையடுத்து, போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.