முகப்பு
கன்னியாகுமரி

நகை திருட்டு: இருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே உறவினா் வீட்டிலிருந்து 2 பவுன் தங்க நகை திருடியது தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:35 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே உறவினா் வீட்டிலிருந்து 2 பவுன் தங்க நகை திருடியது தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள நாரந்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் மேரி லீலா. இவருக்கு திருமணமாகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இவரது உறவினா்களான குழிக்கோடு பகுதியைச் சோ்ந்த லிவிங்ஸ்டன், சதீஷ் ஆகியோா் இவரது வீட்டில் தங்கியிருந்தனராம். இருவரும் வீட்டிலிருந்து சென்ற பின், வீட்டிலிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இது குறித்து,லிவிங்ஸ்டன், சதீஷ் ஆகியோா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments