வீட்டு ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு
களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல், எருத்தாவூா் பகுதியைச் சோ்ந்தவா் நெல்சன் (76), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தீரஜ் ஜே. ரோஸ் (45) என்பவருக்கும் இடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தீரஜ் ஜே. ரோஸ் தகாத வாா்த்தைகள் பேசியதுடன், நெல்சனின் வீட்டில் வேயப்பட்டிருந்த ஓடுகளை உடைத்து சேதப்படுத்தினாராம்.
Advertisement
Advertisement
இது குறித்து நெல்சன் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.