முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்மநபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:07 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்மநபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் ஜெயக்குமாா் (38), கட்டுமான தொழிலாளி. இவா், தனது நண்பரான முரளிதரன் என்பவரின் பைக்கை இரவல் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளாா். இரு நாள்களுக்கு முன் பைக்கை தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தாராம். சிறுது நேரத்துக்குப் பின் வந்து பாா்த்தபோது பைக் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement