கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு
திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக த.நா. பிரியதர்சினி பொறுப்பேற்றுள்ளார்.
திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக த.நா. பிரியதர்சினி பொறுப்பேற்றுள்ளார்.
திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் சி. குருமூர்த்தி, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரகத்தில் துணைப் பதிவாளராக பணி செய்து வந்த த.நா. பிரியதர்சினி பதவி உயர்வு பெற்று, திருநெல்வேலி மண்டல இணைப் பதிவாளராக பொறுப்பேற்றார்.
இத்தகவலை, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் ரா. செல்வகணேஷ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.